கோவை என்றால் கல்வியிலும் முதன்மை என நிரூபித்துள்ள மாணவ செல்வங்களுக்கு என் பாராட்டுகள்- அமைச்சர் புகழாரம்.!

Default Image

இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொதுத்தேர்வில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.04 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட 3.11 சதவீத மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் 97.90 % தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், விருதுநகர் மாவட்டம்  97.51 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், கரூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில்,  பிளஸ் 1 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து, கோவை மாவட்டத்திற்கே பெருமை சேர்த்து கோவை என்றால் கல்வியிலும் முதன்மை என்று நிரூபித்துள்ள மாணவ செல்வங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மேலும், பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு என் வாழ்த்துகள், அடுத்து வரவிருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளிலும் இதே போன்று சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும் மனமார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்