அக்காவைக் கொன்று தலைமறைவான தம்பி கைது..!

Published by
murugan

தனக்குப் பிடிக்காதவரை காதலித்ததால் அக்காவை கொலை செய்த தம்பி கைது.

ராமநாதபுரத்தை சார்ந்த செல்வம் இவர் தனியார் திருமண மஹால் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்தமகள் சுவாதி (27) என்பவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தபோது மறுத்துள்ளார்.

தான் மேலும் படிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த சுவாதியை அவரது தம்பி சரண்குமார் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுதொடர்பாக அவரின் தந்தை  அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து சரண்குமாரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், போலீசார்  சரண்குமாரை கைது செய்தனர்.

சுவாதி உறவுக்காரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு முதலில் மறுத்த பெற்றோர் பின்னர் சம்மதித்து உள்ளனர். சுவாதி காதலிக்கும் உறவுக்கார பையனை சரண்குமாருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை தனது அக்காவிடம் சரண்குமார் கூறிய நிலையில் சுவாதி தனது பேச்சை கேட்காததால் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
murugan

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

3 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

3 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

4 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

5 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

6 hours ago