முதலமைச்சரின் கீழ் இயங்கும் மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
கடந்த 1971-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க மு.க.ஸ்டாலின், சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், மாநில கொள்கை வளர்ச்சிக் குழு என்ற பெயர், தற்போது மாநில திட்ட ஆணையம் என மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து முக ஸ்டாலின், பல உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், துறைகளின் பெயர் மாற்றம் என பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…