மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

முதலமைச்சரின் கீழ் இயங்கும் மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

கடந்த 1971-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க மு.க.ஸ்டாலின், சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மாநில கொள்கை வளர்ச்சிக் குழு என்ற பெயர், தற்போது மாநில திட்ட ஆணையம் என மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே, தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து முக ஸ்டாலின், பல உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், துறைகளின் பெயர் மாற்றம் என பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 

Recent Posts

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

20 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

37 minutes ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

1 hour ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago