நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், நாளைய தினம் நடைபெற இருந்த நந்தினியின் திருமணம் வேறு ஒரு நாள் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நந்தினியின் கணவராக இருக்கும் குணா தெரிவித்துள்ளார்.
2004 ம் ஆண்டு அரசு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 27 ம் தேதி நீதிபதி சாமுண்டீஸ்வரி முன்னாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் சாட்சிகள் ஆதாரம் என்று கூறி நந்தினி மற்றும் ஆனந்தன் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் மறுத்து விட்டனர்.
நீண்ட நாட்களாக மதுவுக்கு எதிராக போராடும் நந்தினி அவர்களுக்கு நாளைய தினம் ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடக்க, சிறையில் இருக்கும் இருவரையும் மீட்டு வர நந்தினியின் சகோதிரி மற்றும் கணவராக வர இருக்கும் குணா ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் , ஜூலை 9ம் தேதி வரை ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமை உருவாகியது . இந்த நிலையில், நந்தினி சிறையில் இருந்து வெளி வந்த பின்னரே திருமணம் நடக்கும் என்று மணமகன் குணா கூறியுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…