புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து அண்ணா சிலை அருகே முதல்வர் நாராயணசாமி போராட்டம்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 400 பேர் கொண்ட துணை ராணுவம் வந்திருந்தது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது என தெரிவித்திருந்தனர்.
அதாவது, கிரண்பேடியை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதுபோன்று முதல்வர் இல்லத்தை முற்றுகையிட போவதாக பாஜகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து அண்ணா சிலை அருகே முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக இருப்பதாக கூறி, கிரண் பேடியை திரும்பப்பெற காங்கிரஸ் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…