மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், 1.5 ஆண்டுக்கு பின்னர், நந்தீஸ்வரரின் தலை வெளியே தெரியும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகி உள்ளது .
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணையின் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் அருள்மிகு சுவாமி ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது உள்ளது. அணையின் நீர்மட்டம், 69 அடிக்கு மேலே உயரும்போது கோவில் நந்தியின் சிலையானது மூழ்கி விடும்.
கடந்த ஆண்டு பிப்ரவரிமாத இறுதியில் அணை நீர்மட்டம், 69 அடிக்கு கீழ் சரிந்ததால், நந்தி சிலை வெளியே தெரிந்தது. அதே போல் மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் நீர்மட்டம் உயர்ந்ததால், சிலை மூழ்கியது.
இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு தற்போது நீர் திறந்ததால் கடந்த மாதம் 12ந்தேதி 101 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 67.54 அடியாக சரிந்த நிலையில் பண்ணவாடி நீர்பரப்பில் மூழ்கி இருந்த நந்தி சிலையின் தலையானது நேற்று முழுமையாக வெளியே தெரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,352 கனஅடியாக இருந்த, அணையின் நீர்வரத்து,5,081 கனஅடியாக அதிகரித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…