தமிழ்நாடு

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டம்..! பொதுமக்களுக்கு அழைப்பு…!

Published by
லீனா

சென்னை ஆளுநர் மாளிகையில்  அக்டோபர் 15, 2023 முதல் அக்டோபர் 24, 2023 வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களுக்கு ராஜ் பவன், மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை ஆளுநர் மாளிகையில், ‘நவராத்திரி கொலு – 2023’ அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24, 2023 வரை கொண்டாடப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 (ஞாயிறு) அன்று நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்டோபர் 24, 2023 (செவ்வாய்க்கிழமை வரை) தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களில் பங்கேற்க (பள்ளி மாணவர்கள்/ பொதுமக்கள் உட்பட) அனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.

நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.  விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும்.

விண்ணப்பங்களை பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் வாயில் எண். 2 இல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை சென்னை ஆளுநர் மாளிகைக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“அந்த மனசு தான் சார் கடவுள்”… முத்துக்குமார் குடும்பத்திற்கு பெரிய உதவிய செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…

2 hours ago

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

3 hours ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

4 hours ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

4 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

6 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

7 hours ago