M.P venkatesan Neet [Representative Image]
குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய நீட் மசோதா குறித்த கடிதம், வரவில்லை என உள்துறை அமைச்சகம் கூறுவது பற்றி ஒன்றிய அரசை எம்.பி வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தமிழக சட்டசபையில் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஆவது தொடர்பாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் கடந்த ஜனவரி மாதம் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இக்கடிதம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் அளித்த பதிலை சுட்டிக்காட்டி ஒன்றியஅரசை விமர்சித்துள்ளார்.
இந்த கடிதம் தொடர்பாக, குடியரசுத்தலைவர் அலுவலகம் மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக பதில் அளித்துள்ளது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படி எந்த கடிதமும் வரவில்லை என தெரிவித்துள்ளது. இதன்மூலம் காணாமல் போவது கடிதம் அல்ல, ஒன்றிய அரசின் நிர்வாக நேர்மை என குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…