நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள்!

Published by
Rebekal

நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தின்னூர்நாடு எனும் பகுதியில் உள்ள கண்ணி பட்டியை சேர்ந்த 45 வயதான சாமிதுரை என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில்இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தேவனூர் வனப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் சாமிதுரை அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்த பொழுது சாமிதுரை மருமகன் ராஜ்குமார் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சில மாதங்களுக்கு முன் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ராஜ்குமார் முன்னின்று மாமனாருக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை பேசி எடுத்து கொடுத்ததாகவும், தட வழி பிரச்சனை இருந்ததால் குத்தகை எடுத்த நிலத்தில் சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விவசாயம் செய்ய முடியாததால் ராஜ்குமார் குத்தகை தொகையை திரும்பப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் குத்தகை ஒப்பந்தம் தராமல் சாமிதுரை நாட்களை கடத்தியதால் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சமிதுரை தனக்கு சொந்தமான நிலத்தை 20 லட்சத்திற்கு விற்று மூன்று மகளுக்கும் சாமிதுரை பிரித்து கொடுக்காமல் வைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மாமனார் மீது கோபத்தில் இருந்த ராஜ்குமார் மற்றும் மற்றொரு மருமகன் பிரசாத் ஆகிய இருவரும் சேர்ந்து மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டு தங்களது நண்பர்கள் கார்த்திக் மற்றும் பழனியப்பன் முருகேசன், விஜயகுமார், சகாதேவன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து நிலம் ஒன்று விற்பனைக்கு வருவதாக கூறி அவரை  காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மது அருந்துவிட்டு அனைவரும் சேர்ந்து சாமி துறையின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிதுரையின் மருமகன் ராஜ்குமார், பிரசாத் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர் .தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

28 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago