ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என தெரிவித்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல் வாரத்தில் ஆலையின் ஒட்டுமொத்த கொள்திறனுக்கு உற்பத்தி செய்யக்கூடாது எனவும் வழிகாட்டு முறைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இதனிடையே வரும் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் :

  • முதல் வாரம் ஆலையின் ஒட்டுமொத்த கொள்திறனுக்கும் உற்பத்தி செய்யக்கூடாது என்றும் முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் மட்டுமே ஆலையை இயக்க வேண்டும்.
  • தொழிற்சாலையில் உள்ள அனைத்து உபகரணங்களும், கருவிகளும் கொள்கலன்களில் உடைப்பு ஏதேனும் கசிவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்பே பணியை தொடங்க வேண்டும்.
  • ஒருவர் பயன்படுத்திய கருவியை மற்றொருவர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூடுதல் கருவிகளை வைத்து வேலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • குறிப்பாக ஊழியர்கள் ஆலைக்குள் நுழையும் முன்பாகவே உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

5 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

6 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

6 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

7 hours ago