புதிதாக திறந்த ஹோட்டல்.. “ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம்” கேள்விக்குறியான தனிமனித இடைவேளை!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதில், அங்கு தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆயினும் மக்கள் பலர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டது. அங்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்ட மக்கள், எப்படியாவது பிரியாணி வாங்கி விட மாட்டோமா என முகக் கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின் பற்றாமலும், ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு உள்ளே நுழைந்து பிரியாணி வாங்கி சென்றனர்.
இதனால் அங்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025