ஊரடங்கு 4.0! தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் என்னென்ன?!

Published by
மணிகண்டன்

கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள 4ஆம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் கூடுதல் முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும் எனவும், வேறு எந்த புதிய தளர்வுகளும் அளிக்கப்படவில்லை.

அடுத்ததாக, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

அதில், மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் அனுமதி தேவையில்லை. ஆனால், வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி பெறுவது கட்டாயம். அரசுபணி மற்றும் தனியார் நிறுவன வேலைகளுக்கு செல்ல அரசு / தனியார் பேருந்துகளில் 20 நபர்கள் செல்லலாம். வேன்களில் 7 நபர் மட்டுமே செல்லலாம்.

தேசிய ஊரக வேலை அளிப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத பணியாட்களை வேலைக்கு அனுமதிக்கலாம்.

12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தவிர பிற மாவட்டங்களில் 100 வேலையாட்களுக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்கள், 100 சதவீத வலையாட்களுடனும், 100 ஊழியர்களுக்கு அதிகமானவர்களை கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பணியார்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களை (தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை) பராமரிப்பு பணிகளுக்காக குறைவான வேலையாட்களை நியமித்து பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளுக்காக தயாராகும் வீரர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், சென்னை மாநகராட்சி ஆணையரிடமும் அனுமதி பெற்று தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறலாம். 

நோய் தொற்று வருங்காலங்களில் குறைவதை தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

Published by
மணிகண்டன்

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

23 minutes ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

57 minutes ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

11 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

14 hours ago