tneb smart meter [File Image]
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு மின்சார வாரியம், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் புதிய டெண்டர் கோரியது.
தமிழகத்தில் தற்போது அனைவரது வீடுகளிலும் டிஜிட்டல் மீட்டர் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மின் உபயோகம் கணக்கிடப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருக்கிறது. இதில், மின் கணக்கீடும் பணியில் குளறுபடி ஏற்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், புதிய ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டுக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தப்படும் நடைமுறை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூன் மாதம் விடப்பட்ட ஒப்பந்த புள்ளியில் பங்கேற்ற நிறுவனங்கள் சந்தேகங்களை முன்வைத்ததால் அதனை, மின்வாரியம் ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு புதிய டெண்டரை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து இணைப்புகளில் பொருத்தும் வகையில் ஒரே கட்டமாக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தேர்வாகும் நிறுவனத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. அதில், 10 ஆண்டுக்கு மீட்டர்களை பொருத்துதல், தகவல் தொடர்பு வசதியை பெருக்குவது, ஒருங்கிணைப்பு, பராமரிப்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என பல்வேரு நிபந்தனைகளை விதித்துள்ளது மின்சார வாரியம்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…