தமிழ்நாடு

தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை – 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Published by
லீனா

தூத்துக்குடியில், முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதர ரீதியாக பின்தங்கியவர் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் திரண்ட வியாபாரிகள்..!

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து, தூத்துக்குடி முருகேசன் நகரில் அவர்கள் இருந்தபோது மர்ம கும்பல் வீடு புகுந்து மாரி செல்வம், கார்த்திகேயன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் வெட்டி உள்ளது.

இதனையடுத்து, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் இருவரின் உடலும், மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். உயிரிழந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 2 பேர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கருப்பசாமி, பரத் விக்னேஸ்குமார் ஆகிய இருவர் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் சரணடைந்தனர்.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

48 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago