தமிழ்நாடு

தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை – 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Published by
லீனா

தூத்துக்குடியில், முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதர ரீதியாக பின்தங்கியவர் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் திரண்ட வியாபாரிகள்..!

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து, தூத்துக்குடி முருகேசன் நகரில் அவர்கள் இருந்தபோது மர்ம கும்பல் வீடு புகுந்து மாரி செல்வம், கார்த்திகேயன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் வெட்டி உள்ளது.

இதனையடுத்து, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் இருவரின் உடலும், மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். உயிரிழந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 2 பேர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கருப்பசாமி, பரத் விக்னேஸ்குமார் ஆகிய இருவர் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் சரணடைந்தனர்.

Published by
லீனா

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago