SDPI நிர்வாகி மற்றும் PFI முன்னாள் நிர்வாகியை கைது செய்தது என்.ஐ.ஏ!

Published by
பாலா கலியமூர்த்தி

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன், SDPI நிர்வாகி மற்றும் PFI முன்னாள் நிர்வாகி இருவரும் தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் கைது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிக் அலி கைது செய்யப்பட்டுள்ளார். சாதிக் அலி வீட்டில் இன்று சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த சாதிக் அலியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுபோன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரில் PFI முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசரை கைது செய்துள்ளது என்.ஐ.ஏ. முகமது கைசர் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன் (PFI) தொடர்ந்து செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

21 minutes ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

1 hour ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

2 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

2 hours ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

3 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

3 hours ago