இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!
இஸ்ரேல்-ஈரான் போரில் இஸ்ரேலின் படுகொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் தலைவர் காமெனி எவ்வாறு பாதுகாக்கப்பட்டார் என்பதற்கான சீக்ரெட் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை கொஞ்சம் குறைக்கும் வகையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி போர் ஒப்பந்தம் போட்டுள்ள காரணத்தால் அங்கு சற்று பதற்றம் குறைந்திருக்கிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்த சூழலில், ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமெனி படுகொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட்டார்.
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றபோதும், ஈரானின் உளவுத்துறை மற்றும் ராணுவ உத்திகள் இதை தடுத்து, அவரை பாதுகாப்பாக வைத்திருந்தன. அது எப்படி நடந்தது எப்படி அவர் காப்பாற்றப்பட்டார் என்கிற தகவலும் தற்போது கசிந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காமெனியின் ரகசிய பாதுகாப்பு அமைப்பு
இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கியவுடன், காமெனி தெஹ்ரானில் உள்ள தனது வழக்கமான இடத்திலிருந்து (Leadership House, District 11) ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டார். இவரை பாதுகாக்க, ஈரான் ஒரு சிறப்பு எலைட் பாதுகாப்பு பிரிவை (elite protection unit) உருவாக்கியது, இதன் இருப்பு கூட ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கு (IRGC) தெரியாது. இந்த பிரிவு, இஸ்ரேலின் உளவு ஊடுருவல்களை தடுக்க 24/7 காமெனியை கண்காணித்தது.
காமெனி, தனது இருப்பிடத்தை மறைக்க, செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக, நம்பகமான ஒரு உதவியாளர் மூலமாகவே தனது ஆலோசகர்களுடன் தொடர்பு கொண்டார். இது, இஸ்ரேலின் மொசாட் அமைப்பு அவரது இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் தடுத்தது.
ஏன் மொசாட் தோல்வியடைந்தது?
மொசாட், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹெஸ்போல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரை படுகொலை செய்து வெற்றி பெற்றிருந்தாலும், காமெனியை குறிவைப்பதில் தோல்வியடைந்தது. இதற்கு ஈரானின் உளவுத்துறையின் விழிப்புணர்வு, காமெனியின் மின்னணு தொடர்பு தவிர்ப்பு, மற்றும் ரகசிய எலைட் பாதுகாப்பு பிரிவின் செயல்பாடுகள் முக்கிய காரணங்களாக இருந்தன. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலின் காமெனி படுகொலை திட்டத்தை வீட்டோ செய்ததும், இஸ்ரேலின் முயற்சிகளுக்கு பின்னடைவாக அமைந்தது.
காமெனியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
இஸ்ரேலின் தாக்குதல்களால், காமெனி தனது உயிருக்கு ஆபத்து உள்ளதை உணர்ந்து, தனது வாரிசாக மூன்று மதகுருக்களை நியமித்தார். இவர்களில் அவரது மகன் மொஜ்தபா காமெனி இடம்பெறவில்லை. மேலும், தனது ராணுவ தளபதிகளுக்கு மாற்று தலைவர்களையும் நியமித்தார், இதனால் இஸ்ரேல் தாக்குதலில் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டாலும், ஈரானின் ஆட்சி கட்டமைப்பு சீர்குலையாமல் இருக்க உறுதி செய்யப்பட்டது. இந்த காரணங்கள் தான் இஸ்ரேல் கொடுத்த கொலை மிரட்டலில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பிக்க காரணமாகவும் இருந்தது.