NIA Raid in Tamilnadu [Representative Image]
கடந்த வருடம் அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு விசாரணைகள் தொடர்ந்து.
இந்த வழக்கானது தீவிரவாத செயல்பாடுகளை நாட்டுக்குள் கண்காணிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் விசாரணை மேற்கொண்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது .
விசாரணைக்கு உட்படுத்தபட்டரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் பெயரில் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சுமார் 30 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவையில் 20க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னையிலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக 30 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்ற கோணத்தில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சோதனையானது இன்று காலை 6 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…