Nikarshaji: இஸ்ரோவில் தமிழர்கள்.! ‘ஆதித்யா எல்-1’ திட்ட இயக்குனராக தென்காசியை சேர்ந்த பெண்.!

Published by
செந்தில்குமார்

ஆதித்யா எல்-1:

இஸ்ரோ விஞ்ஞானிகள் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை நாளை (செப்டம்பர் 2ஆம் தேதி) விண்ணில் செலுத்தவுள்ளனர். தற்போது, விண்கலத்தை செலுத்துவதற்கான 24 மணிநேர கவுன்ட் டவுன் நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக தமிழர்:

இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்துள்ளார். அதன்படி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக தென்காசியை சேர்ந்த நிகர்ஷாஜி பணியாற்றி வருகிறார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மீரான், சைட்டூன் பீவி தம்பதியின் 2வது மகள் ஆவார்.

படிப்பில் முதலிடம்:

செங்கோட்டை எஸ்ஆர்எம் நகரைச் சேர்ந்த இவர், 1978-79ம் கல்வியாண்டில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, 433 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக இடம் பிடித்தார். அதேபோல் 1980-81ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக இடம் பிடித்தார்.

பின்னர், நிகர்ஷாஜி தனது இளங்கலை பொறியியல் படிப்பை 1982 முதல் 1986 வரை நெல்லையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முடித்தார். தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வரும் நிகர்ஷாஜி ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இஸ்ரோவில் தமிழர்கள்:

இதற்கு முன்னதாக, இஸ்ரோவின் நிலவை ஆய்வு செய்யும் திட்டங்களான சந்திரயான் 1 முதல் 3 வரையிலான திட்டங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர். அதன்படி, சந்திரயான் 1 திட்டத்திற்கு இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் 2 திட்டத்திற்கு இயக்குனராக முத்தையா வனிதாவும், சந்திரயான் 3 திட்டத்திற்கு வீரமுத்துவேலும் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

இதில் சந்திரயான்-2 திட்டமானது தோல்வியை சந்தித்தது. ஆனால், சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் திட்டத்திற்காக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திட்ட இயக்குனர்களாக பணியாற்றிய நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்1 திட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த நிகர்ஷாஜி திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

10 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

52 minutes ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

18 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

19 hours ago