File photo | Photo Credit: PTI
மாமன்னன் திரைப்படம் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்தது என்று சிறப்பு காட்சி பார்த்த பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம் இன்று முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அதுவும், அரசியலில் முழுமையாக இறங்கிவிட்டதால் மாமன்னன் தான் எனது கடைசி படம் என்றும் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இத்திரைப்படம் பவர்ஃபுல் அரசியல் படம் என்று படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் மாமன்னன்’ சிறப்பு காட்சி பார்த்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், அனைவர்க்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், மாமன்னன் படத்தின் முழு வெற்றியும் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவுக்கு தான் சேரும். ரொம்ப கஷ்டப்பட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். ஆறு மாத உழைப்பை தற்போது மக்கள் வரவேற்று அதனை கொண்டாடி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த வரவேற்புக்கு நன்றி, மாமன்னன் திரைப்படம் என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்தது. இனி நான் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பில்லை ராஜா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். நான் இந்த ஒரே படத்தில் சமுதாயத்தை திருத்த போறோம் என்றும் கூறவில்லை, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம், எங்கள் வலியை சொல்கிறோம். இதனால் மக்கள் உணர வேண்டும், விழிப்புணர்வு வர வேண்டும், மக்கள் திருந்த வேண்டும், அதற்கு அரசு எப்போதும் துணையாக நிற்கும் எனவும் மற்றொரு கேள்விக்கு பதில் கூறினார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…