எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம் என கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களாக தொகுதி பக்கமே போகவில்லை என்பதால் மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அதிமுகவுடன் கூட்டணியா?அமமுகவுடன் கூட்டணியா? என இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. தற்போது வரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். முதல்வர் பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அழைப்பு வந்ததும் கூட்டணி குறித்து பேசப்படும்.
இந்த தேர்தலில் 2 இடங்கள் கேட்க உள்ளோம். சசிகலாவை மையப்படுத்தி அனைவரும் பேசுவது, அவரிடம் ஏதோ சிறப்பம்சம் உள்ளது. தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவர் வீடு திரும்பியதும் அவரை சந்திக்க நேரம் கேட்போம், எங்களுக்கு நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து உடல் குறித்து முக்குலத்தோர் புலிப்படை சார்பில் விசாரிப்போம் என கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…