எனது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெறவில்லை.! – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

Published by
மணிகண்டன்

எனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்டவர்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் என பல்வேறு நபர்களின் வீடுகளின் நடைபெற்று வருகிறது.

முதலில் சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கரூரில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினரை சோதனை செய்ய அனுமதிக்காமல் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

அதே வேளையில், சென்னை தலைமை செயலகத்தில், டாஸ்மாக் பிரிவு அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்கள் வருமானவரித்துறை சோதனை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, எனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. கரூரில் உள்ள வீடு , சென்னையில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் (அசோக்) வீட்டிலும், அவருக்கு தெரிந்தவர்கள் வீடுகளிலும் தான் சோதனை நடைபெறுகிறது எனவும், வருமான வரித்துறை சோதனை முழுதாக நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து முழு விளக்கம் அளிப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

45 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

1 hour ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago