கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பத்தூரில் உள்ள விமான நிலையத்தில் ஓடுதளம் மிகவும் சிறியதாக இருப்பதால் சர்வேதேச விமானங்களை தரையிறக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் விமான நிலையத்தை விரிவுபடுத்த அருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, முறையாக கருத்துக்களை கேட்டகவில்லை என்றும் தங்களின் எதிர்ப்புகளை பரிசீலினை செய்ய வேண்டும் எனவும் கோவை காளப்பட்டியை சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடுத்தனர். இதன் காரணமாக நிலம் கையகப்படுத்துவதை நீதிமன்றம் தடை செய்திருந்தது.
இந்நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் அப்பீல் வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையத்தை சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…