நிவர் புயல் வந்த சமயத்தில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதனால் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடந்தன.இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.அரசும் புயல் வந்த சமயத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் ஏற்படவில்லை.நிவர் புயலால் பெருமளவு சேதம் ஏற்படாமல் தமிழக அரசு காத்துள்ளது.அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.நிவர் புயல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டையில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.சிறப்பான நடவடிக்கை எடுத்த ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…