சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என சசிகலா தெரிவித்தாக தகவல்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என அதிமுகவில் இருந்து ஒதுங்கிய சசிகலா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் என்னையே வேண்டாம் என்றதால் நானே ஒதுங்கினேன் எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
அதிமுகவினர் ஒன்றாக இருந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால், தனித்தனியாக நின்று தோற்றுவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக வீணாவதை பார்த்து கொண்டியிருக்கமாட்டேன் என்றும் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும், அதை யாராலும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிசகலா, தற்போது நாள்தோறும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களிடையே அவர் பேசும் தொலைபேசி உரையாடல்கள் அவ்வப்போது வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…