தமிழ்நாடு

புதிய திருப்பம் : டார்ச் லைட் சின்னம் வேண்டாம் -எம் ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவிப்பு

Published by
Venu

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் கிடைக்காத நிலையில்,தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்று எம் ஜி.ஆர் மக்கள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்தது.அதன்படி, தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு “டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கியது.ஆனால் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு “ டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.தமிழகத்திற்கு சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், டார்ச் லைட் சின்னத்தை போராடி பெறுவோம் என்று  கமல் தெரிவித்தார்.எனவே கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட  நிலையில், பிரச்சார வாகனங்களில் இருந்து டார்ச் லைட் சின்னம் அகற்றப்பட்டது.

பின்பு  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  முறையீடு செய்யப்பட்டது.மேலும் பேட்டரி டார்ச்” சின்னத்தை தமக்கு ஒதுக்கும்படியும், எம்ஜிஆர் மக்கள் கட்சி “பேட்டரி டார்ச்” சின்னத்தை பயன்படுத்துவதைத் தடுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டி  மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் புதிய திருப்பமாக , எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கியது ஏற்புடையது அல்ல என்றும் மாற்று சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன் என்றும் எம் ஜி.ஆர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ம.நீ.மத்திற்கு பாண்டிச்சேரியில் டார்ச் லைட் ஒதுக்கியுள்ளதால். வெற்றி பெற கூடும் மாற்று சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன்.எம்ஜிஆரின் புகழ் டார்ச் லைட் மீது பட்டு புதுச்சேரியில் கமல்ஹாசன் வெற்றி பெற்று எம்ஜிஆர் மக்கள் கட்சி விடக்கூடும் என்பதால் தனக்கு டார்ச்லைட் வேண்டாம். 2021 சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்திற்கு பதில் எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதன் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இதனால் மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

2 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

2 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

3 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

3 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

4 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

5 hours ago