குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்த கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை பாரிமுனை குறளகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில், குறளகம் முதலாக பாரிமுனை சிக்னல் வரையில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, அவர்கள் கையில் குடியுரிமை சட்டம் குறித்தபதாகைகளையும், இந்திய தேசியக்கொடியையும் ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட சீர்மிகு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…