ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் ஆவார்.இவர் கடந்த ஓராண்டாக காஞ்சிபுரத்தை அடுத்த ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரகடம் ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு நேர வேலை என்பதால் தோழி மட்டும் காலை வேலைக்கு சென்றுள்ளார்.அந்த இளம்பெண் வீட்டில் தனியாக ஓய்வு எடுத்து கொண்டிருந்துள்ளார்.
பின்னர் மாலை 4 மணியளவில் தோழி வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீடு பூட்டாமல் இருந்துள்ளது.அந்த இளம்பெண் மயங்கிய நிலையில் சத்தம் இல்லாமல் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தோழி உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர் அந்த இளம்பெண் இறந்தது தெரியவந்துள்ளது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் நகக்கீறல்களும், கழுத்து பகுதி சிவந்த நிலையில், நகக்கீறல்களும் இருப்பதாக கூறியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும் விதத்தில் இரண்டு,மூன்று நபர்கள் நடமாடியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே தாம்பரத்தில் தங்கி அதே கம்பெனியில் பணிபுரியும் இளம்பெண்ணின் காதலன் என்று கூறப்படும் மணீஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அப்பகுதியில் கஞ்சா அருந்துபவர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து இறந்த பெண்ணின் காதலன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம், காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…