வீட்டிற்குள் தனியாக இருந்து ஒடிசா பெண்!மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தோழி கண்ட காட்சி!

Published by
Sulai
  • வீட்டிற்குள் தனியாக இருந்த இளம்பெண்.மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தோழி அவரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
  • தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் ஆவார்.இவர் கடந்த ஓராண்டாக காஞ்சிபுரத்தை அடுத்த ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரகடம் ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு நேர வேலை என்பதால் தோழி மட்டும் காலை வேலைக்கு சென்றுள்ளார்.அந்த இளம்பெண் வீட்டில் தனியாக ஓய்வு எடுத்து கொண்டிருந்துள்ளார்.

பின்னர் மாலை 4 மணியளவில் தோழி வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீடு பூட்டாமல் இருந்துள்ளது.அந்த இளம்பெண் மயங்கிய நிலையில் சத்தம் இல்லாமல் கீழே விழுந்து கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தோழி உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர் அந்த இளம்பெண் இறந்தது தெரியவந்துள்ளது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் நகக்கீறல்களும், கழுத்து பகுதி சிவந்த நிலையில், நகக்கீறல்களும் இருப்பதாக கூறியுள்ளனர்.

பின்னர் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும் விதத்தில் இரண்டு,மூன்று நபர்கள் நடமாடியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே தாம்பரத்தில் தங்கி அதே கம்பெனியில் பணிபுரியும் இளம்பெண்ணின் காதலன் என்று கூறப்படும் மணீஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அப்பகுதியில் கஞ்சா அருந்துபவர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து இறந்த பெண்ணின் காதலன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம், காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

4 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

4 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

12 hours ago