தீபாவளி வெளியாகும் படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதே நாளில் கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது.
தீபாவளியன்று எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவும், அப்படி அனுமதியின்றி திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.இதனால் பிகில் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளிக்காமல் இருந்ததால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி படங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .முதலமைச்சர் பழனிசாமி, செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்புக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் கடம்பூர் கூறுகையில்,சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…