விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  முதியவர் உயிரிழந்த வழக்கு.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Published by
Surya

முதியவர் உயிரிழந்த வழக்கில் தமிழக தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. 74 வயதாகும் இவர், விவசாயம் பார்த்து வருகிறார். அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார்.

இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடயம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அவரும் நேற்று முன்தினம் மாலை ஆஜராகி, மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அதற்கான அபராதத்தை காட்டுவதாக தெரிவித்தார்.

அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதியவர் உயிரிழந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published by
Surya

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

2 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

2 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

3 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

4 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

4 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

5 hours ago