CauveryIssue : அக்டோபர் 12ஆம் தேதி கூடும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.!

Published by
கெளதம்

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலம் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசும், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என கர்நாடக அரசும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இந்த விவகாரமானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகிய அமைப்புகளிடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று மையம் தமிழத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் வீதம் அடுத்த 15 நாட்கள் திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதே நேரத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலும் காவிரி ஒழுங்காற்று மைய உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்றன. அதே போல தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது. தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடக அரசு முறையிட்டது.

இதனை தொடர்ந்து தான், 88வது காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் வரும் அக்டோபர் 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா இரு மாநில அரசுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் , குருவை சாகுபடிக்காக வினாடிக்கு 12,500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடதக்கது.

Published by
கெளதம்

Recent Posts

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 minutes ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

1 hour ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

3 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago