முதல்வர் பணிக்கு இடையூறு.! அரசு சார்பில் அண்ணாமலை மீது பாய்ந்த அவதூறு வழக்கு.!

Published by
மணிகண்டன்

திமுக சொத்துப்பட்டியல் உண்மைக்கு புறம்பான தகவல்கள் என முதல்வர் சார்பில் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டுள்ளது. 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திமுக சொத்துப்பட்டியல் (DMK Files) என்ற ஓர் வீடியோ பதிவை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அதில், திமுக எம்பிக்கள், திமுக அமைச்சர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள் பெயர்களில் உள்ள சொத்துக்கள் என குறிப்பிட்டு தகவல்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த சொத்துப்பட்டியல் குறித்து எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை தரப்பும் பதில் நோட்டீஸ் அனுப்பினர்.

தற்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அரசு சார்பில் வழக்கு தொடர்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்துறை அனுமதியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரபட்டுள்ளது. அதில், திமுக சொத்துப்பட்டியல் என அண்ணாமலை வெளியிட்ட தகவலில் உண்மையில்லை. அதில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளன. இந்த உண்மைக்கு புறம்பான தகவல்கள் காரணமாக முதல்வர் பதவிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டு, ஜூன் மாதம் விசாரணை நடத்தப்படும் என சென்னை முதன்மை நீதிமன்றம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

12 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

12 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

13 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

13 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

14 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

14 hours ago