கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் விட்டு சென்றுள்ளனர்.
இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும், 1,300-க்கும் மேற்ப்பட்ட இரு சக்கர வாகனங்களும் விட்டுச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில், வாகனங்களை திரும்ப பெறும் பொதுமக்களிடம் 55 நாட்களுக்கும் வாடகை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அறிவுறுத்தலின் படி எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றிற்கு ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ. 50 , இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 , மிதிவண்டிகளுக்கு ரூ.15 என ஒருநாள் கட்டணத்தை மட்டும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…