M.P venkatesan Neet [Representative Image]
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மதுரை திமுக சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சு.வெங்கடேசன் எம்பி, CBSE ஒரே நிறுவனம், ஒரே பாடத்திட்டம். அதாவது, சிபிஎஸ்இ பள்ளிக்கு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம். ஆனால் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி என ஐந்து மண்டலத்திற்கும் ஐந்து வகையான தேர்வு நடத்துகிறது மத்திய அரசு. இந்த மண்டலத்திற்கும் 5 விதமான தேர்வு தாள்கள், 5 விதமான தேர்வுகளை CBSE நடத்துகிறது.
ஒரே கல்வி நிறுவனம், ஒரே தேர்வு கிடையாது 5 விதமான தேர்வுகளை நடத்துகிறது. ஆனால், இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்களில், வெவ்வேறு கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு நீட் என்ற ஒரே தேர்வு மட்டுமே நடத்துவோம் என்று மத்திய அரசு சொல்வது அப்பட்டமான தாக்குதல். எனவே, “ஒரே தேசம் ஒரே தேர்வு” என்பது அரசியல் மோசடி. இது ஒரு திட்டமிட்ட சதி என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…