திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் எனும் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தயாராகி வந்த சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து கச்சாஎண்ணெய் அதிக அளவில் வெளியேறி நிலத்தில் பரவியுள்ளது. இந்நிலையில், இந்த ஓஎன்ஜிசி குழாய் நேற்று இரவே உடைந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் தாமதமாகதான் வந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள், தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சில அதிகாரிகள் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும், எண்ணெய் குழாய் உடைப்பை சரி செய்ய முக்கியமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதிப்படைந்த விவசாயின் நிலம் சுத்தம் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…