நீதிமன்ற கேள்விகளுக்கு அந்தந்த துறை செயலாளர்கள் மட்டுமே பதில் கூற வேண்டும்.! சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.!

Published by
மணிகண்டன்

துணை ஆட்சியராக பொறுப்பு வகிக்கும் ஜெயராம் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், தனது பெயர் பதவி உயர்வு பெரும் பட்டியலில் இருந்தும் இன்னும் பதவி உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு முதலில் தனிநீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்த போது, பட்டியலில் இருந்தாலே பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மீண்டும் ஜெயராம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை இரு நீதிபதி அமர்வு விசாரிக்கையில்,பதவி உயர்வு குறித்து துறை ரீதியிலான விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. அதன் பெயரில், பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஏனென்றால், அந்தந்த துறை ரீதியிலான நீதிமன்ற கேள்விகளுக்கு துறை தலைமை செயலாளர்கள் மட்டுமே பதில் கூற வேண்டும் என்றும், இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்ப வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.  இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

8 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

8 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

9 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

9 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

10 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

11 hours ago