பள்ளிகள் திறப்பு.. 2 தேதிகள்..! விரைவில் வெளியாகும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Published by
பாலா கலியமூர்த்தி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம்தேதியும், இதேபோல் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் வெயில் தொடர்ந்து சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால், பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இந்த சமயத்தில், தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் இன்று அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஜப்பானில் இருந்து முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன முடிவு எடுத்து உள்ளீர்கள் என கேட்டார். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது கடும் சிரமம் என்பதை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம்.

நேற்று மாவட்ட கல்வி அலுவர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி இருக்கிறோம். திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் கூறியுள்ளனர். பள்ளி திறப்பை தள்ளிவைக்க பெற்றோர் கோரிக்கை வைக்கப்பட்டாலும் வெளியிலின் தாக்கம் உள்ளது என்பது உண்மைதான்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார். எனவே, தமிழ்நாட்டில், ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கும்போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

13 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

14 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

15 hours ago