தமிழ்நாட்டின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் பின்னர், பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்தார்.
இவர் இதற்கு முன்னர் தமிழகத்தில் பாஜக துணைத்தலைவர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…