தமிழ்நாட்டின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் பின்னர், பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்தார்.
இவர் இதற்கு முன்னர் தமிழகத்தில் பாஜக துணைத்தலைவர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…