கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன.
இதற்கிடையில், நேற்று அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக போட்டியிடம் தொகுதிகளையும் அதிமுக வெளியிட்டது.இந்நிலையில், நேற்று பாஜக, பாமக போட்டியிடம் தொகுதி வெளியானதும் சில அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதியை அதிமுக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்த்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்காமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், ஆலங்குடி, பல்லடம் , கே.வி குப்பம், விருத்தாசலம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…