ஓபிஎஸ் சொத்து, கடன் மதிப்பு பலமடங்கு உயர்வு., வேட்புமனு தாக்கலில் வெளிவந்த விவரம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 12ம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனுரில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ்-ஸின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து 2016ல் ரூ.55 லட்சமாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் ரூ.5.19 கோடியாக உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் அசையும் சொத்து 843% உயர்ந்துள்ளது. இதுபோன்று அசையா சொத்து 5 ஆண்டில் 169% உயர்த்திருப்பது அவர் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுவின் மூலமாக தெரியவந்துள்ளது.

துணை முதல்வரின் அசையா சொத்து 2016ல் ரூ.98 லட்சமாக இருந்துள்ளது. 2021ம் ஆண்டில் ரூ.2.64 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் அளவும் 988% அதிகரித்துள்ளது. கடந்த 2016ல் கடன் ரூ.25 லட்சகமாக இருந்த நிலையில், 2021ல் ரூ.2.72 லட்சம் என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். துணை முதல்வரின் அசையும் சொத்து, அசையா சொத்து இரண்டுமே பலமடங்கு உயர்த்திருப்பது அவரது வேட்புமனுவின் மூலமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

5 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

5 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago