செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை செப்.30-க்குள் முடிக்க உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

மைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் இறுதி விசாரணையை நிறைவு செய்ய 6 மாத கூடுதல் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறைக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

அதற்கு மேல் எந்த கால அவகாசமும் வழங்கப்படாது, விசாரணை முடிக்கவில்லை என்றால் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 6 மாத அவகாசம் கோரிய தமிழ்நாடு மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறையின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அவகாசத்தை தெரிவித்ததால், தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

இதனிடையே, செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பான வழக்கில் 2 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

8 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

10 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago