மதுரையில் ஒத்தகடைப் பகுதியில், நீதிமன்றம் மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு.
மதுரையில் ஒத்தகடைப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்பட்டு வருகிறது. இதனருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது.
இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது. மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் காலி மதுபான பாட்டில்கள் வீசுகின்றனர். எனவே நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் இடமாற்றம் செய்யவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் இந்த கடையை மூடி சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…