#BREAKING: ஆந்திராவுக்கு ஆக்சிஜன்.., ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை..!

Published by
murugan

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை 

கொரோனாவின் 2-வது அலை காரணமாக வட மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை நிலவிவருகிறது. இதற்கிடையில், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானா அனுப்பியதாக சர்ச்சையானது.

இதற்கு எதிர்க்கட்சியினர்  கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் உரிய  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தமிழகத்தில் தயாரான ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பியது குறித்து ஐகோர்ட் தானாக  முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆக்சிஜன் விவகாரத்தை தாமாக முன்வந்து சென்னை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழகத்தில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் உள்ளதா..? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தமிழக அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவிக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago