ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு காரணமாக 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்…!

Published by
லீனா

இயந்திர கோளாறு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உச்ச நீதிமன்றமும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகளை கண்காணிக்க, இதற்கென்று தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில்,  அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை, நேற்று காலை 7 மணி அளவில் அதனை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.

இதனை ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டு சென்றது. ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று ஆக்சிஜன் தயாரிப்பு கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரத்தில்  பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  பழுது நீக்கப்பட்டு உற்பத்தியை தொடங்க இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

10 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

11 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

12 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago