தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அதிமுக இன்று ஆலோசனை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், […]

#ADMK 2 Min Read
Default Image

இன்று முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி..!

இன்று முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று உயர் […]

#MKStalin 3 Min Read
Default Image

#BREAKING: நாளை முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி!

பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது நாளை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து கோயில்களிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் இந்துசமய […]

- 3 Min Read
Default Image

#BREAKING: ஆன்லைன் வழியிலேயே கல்லூரி தேர்வுகள் – உயர்கல்வித்துறை!

பிப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் தேர்வே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை விளக்கம். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் […]

higher education 3 Min Read
Default Image

#BREAKING: பிப்.1 முதல் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறப்பு – தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் பிப். 1 ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கொரோனா கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1 முதல் 15 வரை […]

- 4 Min Read
Default Image

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 32,52,751 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழப்பின் எண்ணிக்கை 37,412-ஆக உள்ளது. இதுபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 28,620 பேர் டிஸ்சார்ஜ் […]

#COVID19 3 Min Read
Default Image

#BREAKING: பிப்.15-ஆம் தேதி வரை இவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பு – தமிழக அரசு

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட வரும் 1 முதல் 15 வரை கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி […]

CM MK Stalin 8 Min Read
Default Image

#BREAKING: இரவு நேர ஊரடங்கு ரத்து.. பிப் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]

CM MK Stalin 3 Min Read
Default Image

#BREAKING: மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் இல்லை – பள்ளிக்கல்வித்துறை

மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மத தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம். அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் […]

investigation 7 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அதிமுக நாளை ஆலோசனை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் நாளை ஆலோசனை. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், […]

- 3 Min Read
Default Image

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் புதிய வாகனம் – இடைக்கால தடை நீக்கம்!

தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு. ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான இலகுரக வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இலகுரக வாகனங்களை […]

Driving School 3 Min Read
Default Image

நியாயவிலை கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. […]

cereals 3 Min Read
Default Image

பிப் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டால் மே மாதத்தில் தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் […]

CM MK Stalin 5 Min Read
Default Image

வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாளை மறுநாள் சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்  மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். அதன்படி, வேட்பு மனுத்தாக்கல் வரும் 28 தேதியும், வேட்பு மனுத் தாக்கல் […]

#Election Commission 3 Min Read
Default Image

பொங்கல் பரிசு தொகுப்பு தரம் குறைப்பாடு – அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை!

பொங்கல் பரிசு தொகுப்பு தரம் குறைப்பாடு தொடர்பாக முதுநிலை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக் கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பில், சில இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் […]

pongal gift 2 Min Read
Default Image

#BREAKING: உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு!

கடலூரில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு. கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் ஒன்று இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது.  கட்டிடத்தின் அருகில் சிறுவர்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ […]

- 5 Min Read
Default Image

நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை – ஆளுநருக்கு அறிக்கை விட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட்டில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவிற்கு […]

#NEET 8 Min Read
Default Image

திருப்பூரை திணறடித்த சிறுத்தையை பிடித்த வனத்துறை!

திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து மயக்கமடைய அரை மணி நேரம் வரை ஆகும் அல்லது மருத்தின் வீரியத்தை […]

forest 4 Min Read
Default Image

வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை..!

வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி , திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி , திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது. நாளை தமிழக […]

#TNRain 3 Min Read
Default Image

#BREAKING: கடலூர் – கட்டிடடம் இடிந்து விழுந்து 2 சிறார்கள் உயிரிழப்பு!

கடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு என தகவல். கடலூர் மாவட்டம் வடக்கு ராமபுரம் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் இடிந்து 2 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்காக கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு சிறார்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் இரண்டு காயமடைந்தியிருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பழைய கட்டிடத்தின் அருகில் சிறார்கள் அமர்ந்திருந்த போது விபத்து உள்ளாகியுள்ளது. இந்த […]

- 2 Min Read
Default Image