தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேர் பாதிப்பு!

In Tamil Nadu, 28,515 people were confirmed infected with corona in a single day, while 28,620 recovered and returned home.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 28,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 28,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 32,52,751 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை உயிரிழப்பின் எண்ணிக்கை 37,412-ஆக உள்ளது.

இதுபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 28,620 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 30,01,805 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,46,798 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. அதில் 28,515 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,13,534 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 5,591, கோயம்புத்தூர் – 3,629, திருப்பூர் – 1,877, செங்கல்பட்டு – 1,696, சேலம் – 1,431, ஈரோடு – 1,314 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node