சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 07.10.2024) திங்கள் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் சென்னை தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், பூங்குளம், கல்லூர் கிராமங்கள் பல்லடம் மார்க்கப்பட்டி,என்சிஜி வலசு,வடுகப்பட்டி […]
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று உளுந்தூர்பேட்டையில் நடத்தியது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தேசிய அளவில் மது ஒழிப்பு கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு […]
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு, நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மெரினா சாலை காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை பாஸ் உள்ள […]
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய விமான படை சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், விமானப் படையினர் இதுவரை மேற்கொண்ட சாதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை பறைசாற்றும் விதமான தகவல் அதில் இடம்பெற்றுள்ளன. நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Rehersals of Chennai Airshow programme held […]
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது. அதன்படி, இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த போட்டிகள் வரும் அக்டோபர் 24 வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் இந்தாண்டு 11.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்க நிகழ்வு இன்று சென்னை நேற்று உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளை தொடங்கி […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பகுதியில் வீக்கம் இருந்தது.பின்னர் அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமுடன் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி , தமிழ்நாடு […]
சென்னை : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை போற்றிடும் வகையில் கவிஞர் மு,மேத்தா மற்றும் பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். முன்னதாக, சமீபத்தில் கடந்த 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பாடகி சுசீலாவுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தலைமை செயலகம் வந்த பி.சுசீலாவுக்கும், மு. மேத்தாவுக்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதையும் […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 05.10.2024) சனிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு […]
சென்னை : திருப்பதி லட்டு விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் புகழுக்கு களங்கம் விளைவைக்கப்பட்டது எனக்கூறி 11 நாட்கள் விரதத்தை கடந்த மாதம் துவங்கினார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண். நேற்று இந்த விரதத்தை அவர் முடித்துக் கொண்டார். அப்போது திருப்பதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பவன் கல்யாண் உரையாற்றினார். அவர் பேசுகையில், ” இங்கு நிறைய தமிழ் மக்கள் இருக்கிறீர்கள். அதனால் நான் தமிழில் பேசுகிறேன். சனாதனம் என்பது ஒரு […]
சென்னை : விஜய் இன்று ஒரேநாளில் தனது முதல் அரசியல் மாநாட்டுக்கான பூஜையையும், கடைசிப் படத்திற்கான பூஜையையும் நடத்தியுள்ளார். H.வினோத் கூட்டணியில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க, விக்கிரவாண்டியில் நடக்க உள்ள தவெக மாநாட்டிற்கான பூஜையும் நடந்தது. pic.twitter.com/ua4dL9k5p9 — KVN Productions (@KvnProductions) October 4, 2024 இயக்குநர் ஹெச் வினோத் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கடந்த இரு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான கால் நட்டுதல் விழா இன்று அதிகாலை நடைபெற்று, மாநாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சி தலைவர் விஜய். அந்த அறிக்கையில், கட்சி ஏன் தொடங்கப்பட்டது.? தொண்டர்களுக்கான அறிவுரை, ஆகியவை குறிப்பிட்டு தனது அரசியல் பயணம் பற்றி விமர்சனம் […]
சென்னை : நவம்பர், டிசம்பர் மாதம் நெருங்குகிறது என்றாலே பருவமழையும் தமிழகத்தை நெருங்கிறது என்று முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது உள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ” 156 பேட்டரி […]
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 27 தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டு பணிகள் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், தவெக தொண்டர்களுக்கு தோழர்களே எனக் குறிப்பிட்டு மாநாட்டிற்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டு, வி.சாலை […]
சென்னை : தவெக மாநாடு வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுக்கான பூமி பூஜை இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், நடத்தப்பட்டு மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது. விஜய் வருவார் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடினார்கள். ஆனால், விஜய் நடைபெற்ற பூஜைக்கு வருகை தரவில்லை. அறிக்கை ஒன்றை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு […]
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று அதிகாலை பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மாநாடு தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு அரசியல் கருத்துக்களையும், […]
சென்னை : ஆண்டுதோறும் நவம்பர் , டிசம்பர் மாதம் வருகிறது என்றாலே பருவமழை பொழியும், குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அதிகளாவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் ஆண்டுதோறும் அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. இந்தாண்டும் பருமவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு […]
சென்னை : த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். “வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்” என தனது முதல் கடிதம் மூலம் தொண்டர்களுக்கு முறையாக அழைப்பு விடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பூமி பூஜை செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பூமி பூஜை விமரிசையாக செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், மாநாட்டுக்கான பந்தக்கால் கோலாகலமாகஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூ நடப்பட்டது. அருணாச்சலேஸ்வரர் சுவாமி படம், தேவாலயம், மசூதி, கோயில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் என மும்மதங்கள் சாஸ்திரப்படியும், வேத மந்திரங்கள் முழங்க சூலத்துடன் தவெக மாநாடு பந்தல் கால் ஊன்றப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 04.10.2024) வெள்ளி கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், […]