சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள் கிழமை (செப்.30) அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது. முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய்சதீஷ், வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினார். இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு சரியாக செய்யப்பட்டது. தற்போது, ரஜினிகாந்தின் உடல் நிலை […]
சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு இன்று மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்ததில் இருந்து மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. ‘மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம்’ என்கிற திருமாவின் அழைப்பு திமுக கூட்டணிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனை அடுத்து வந்த பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27-ம் தேதியன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பூஜை காலை 8 மணிக்கு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் புஸ்ஸி ஆனந்த். அதன்படி, அவரது தலைமையில், பூஜை நடைபெற உள்ளதால், அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அரசியல் […]
சென்னை : இன்று மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்டுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் காந்தியடிகள் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 03.10.2024) வியாழன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா. […]
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அன்பில் மகேஷ். இவர் அவ்வப்போது மாவட்டந்தோறும் பள்ளிகளிகளுக்கு விசிட் அடித்து மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிகளை ஆய்வு செய்வது வழக்கம் . அப்படி நேற்று காஞ்சிபுரம் , வாலாஜாபாத், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு நேற்று இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சென்னை அமைந்தக்கரையில் உள்ள […]
கிருஷ்ணகிரி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அதிலும், நிர்வாகி கரு.பிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “14 ஆண்டுகளாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சி ஆரம்பித்தோம், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம், பலமுறை […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். தீவிர, உடல் பரிசோதனைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் ICUவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறை மூலம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது என்றும், ரத்தக்குழாய் வீக்கத்திற்கு STENT பொருத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : நேற்று உடல் நலக்குறைவால் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு அவரது உடல்நலம் சீராக உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் இருந்து அறிக்கை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் பதிவு இந்நிலையில், ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த பல்வேறு அரிசியல் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். Read More- நடிகர் ரஜினிகாந்த் […]
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பல்வேறு அரிசியல் தலைவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளனர். மு.க ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]
சென்னை : வரும் அக்டோபர் 12 விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். இந்த ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக , தமிழ்நாட்டில் 58 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழக காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் 42 இடங்களில் அனுமதி அளித்து, 16 இடங்களில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு அனுமதி […]
சென்னை : 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்த சமயத்தில் துணை முதலமைச்சராக அப்போது அமைச்சர் பொறுப்பில் இருந்த மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், கலைஞர் உடல்நிலை , வயது மூப்பு ஆகியவை கருத்தில் கொண்டு கட்சி மற்றும் நிர்வாக பணிகளுக்காக இந்த பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் அதேபோல விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கட்சிப்பணிகளையும், ஆட்சி பணிகளையும் […]
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் அண்மையில் நடைபெற்றது. இந்த மாற்றத்தோடு துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். துணை முதலமைச்சர் பொறுப்பு என்பது முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மூத்த அமைச்சர் என்ற அளவில் அதிகாரம் கொண்ட பதவியாகும். முதலமைச்சர் இல்லாத சமயங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பது, அமைச்சரவை கூட்டங்களை நடத்துவது, சில சமயங்களில் முதலமைச்சரின் அறிவுறுத்தல்களின் பெயரில் அமைச்சர்களுக்கு உத்தரவுகளை கூட துணை முதலமைச்சாரால் பிறப்பிக்க முடியும். இப்படி இருக்கும் சூழலில் அமைச்சரவை பட்டியலில் […]
சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ரஜினி இப்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் […]
சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். உடுமலைப்பேட்டை கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர்
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்கள் தொடர்பான அரசு நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டார். சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி, தமிழ்நாடு சுய உதவி குழுக்களுக்கான […]
மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ், பழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இயக்குநர் மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-க்குஉயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர் , கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கென தனிச் செயலாளர் நியமனம் செய்யப்படுவார். துணை முதலமைச்சருக்கான தனி செயலாளர் பதவியானது, முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருக்கும் தலைமை செயலாளர் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கிய பதவியாகும். […]
சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் உதயநிதிக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளில் இருக்கும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெவ்வேறு […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 4 பட்டியலின அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை என்ற பெருமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புதிய அமைச்சரவை பெற்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில், கயல்விழி செல்வராஜ், கோவி.செழியன், மதிவேந்தன், சி.வி.கணேசன் ஆகிய 4 பட்டியலின அமைச்சர்கள், அமைச்சரவையில் உள்ளனர். […]