டெல்லி : தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். நேற்று மாலை புறப்பட்டு சென்ற அவர் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கான நிதி […]
நாமக்கல் : இன்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் தொடர் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், அங்கிருந்து கண்டெய்னர் லாரி மூலமாக தமிழக எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களை நாமக்கல், குமாரபாளையம் அருகே தமிழக காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். அப்போது கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது நேர்ந்த என்கவுண்டர் சம்பவத்தில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தான். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேலம் சரக டிஐஜி உமா மற்றும் நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா ஆகியோர் செய்தியாளர்களிடம் […]
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் – பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம் அருகே லாரி பிடிக்கப்பட்டு கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் தாக்க, போலீசார் பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அதில், ஒரு கொள்ளையன் உயிரிழந்தனர். பின்னர், ஓட்டுநர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், அந்த லாரியின் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்க்கையில், அதனுள்ளே ஒரு சொகுசு கார் இருந்ததும், அதிலும் கொள்ளையர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. […]
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். அந்த நிகழ்வில் கூறுகையில், ” பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன். […]
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி உற்சாக வரவேற்பை கொடுத்தனர். அவரது வருகைக்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மேலும் மலர் தூவியும் கொண்டாடி செந்தில் பாலாஜியை வரவேர்த்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, முதல் விஷயமாக மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதையை செலுத்தினர். முன்னதாக, தனியார் பத்திரிகைக்கு பேட்டி […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அவருக்கு புழல் சிறை வாசலிலேயே திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். மேலும், வெளியில் வந்தவுடன் நேராக சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதையை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை சிறைவாசம் சென்று வந்த செந்தில் பாலாஜியை […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 30.09.2024) திங்கள்கிழமை கோவை, சென்னை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் கட்சி, சுண்டமேடு சென்னை பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் […]
சென்னை : இன்று காலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சந்தேகத்திற்கிடமான ஒரு கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்தி பிடிக்க முற்படுகையில், அந்த லாரியில் இருந்தவர்கள் காவல்துறையினர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினர் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு வடமாநில கும்பல் ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுப்பட்டு அங்கிருந்து கோவை வழியாக தேசிய நெடுசாலையில் பயணித்து வடமாநிலம் தப்ப முயன்றுள்ளது. அப்போது ஈரோடு – சேலம் தேசிய […]
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். இதற்காக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனிலிருந்து பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு தேவையான முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளார் என்று கூறப்பட்டது. சென்னை […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி. அங்கு விசாரணை முடிவடைந்து, நேற்று செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ரூ.25 லட்சத்திற்கு 2 பிணை உத்தரவாதங்கள் , […]
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் மினி பஸ் ஒன்று எதிர்பாரா விதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை அதுவுமா இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் […]
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு என்ற செய்திகள் கடந்த சில வாரங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த பேச்சுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, கடந்த வாரம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவுக்கு அடுத்த நாள், திமுக மூத்த நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு […]
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை அடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்று மாலை விடுதலைச் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் விடுதலையானதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வந்தனர். திமுக தொண்டர்களின் வெற்றி கோஷங்களுக்கு இடையே புழல் சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்வார், எங்கு செல்வார், […]
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, 2 பேரின் பிணை உத்தரவாதங்கள் அளித்ததை அடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவையடுத்து, தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவரை திரளான திமுக தொண்டர்கள் […]
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த ஜாமீன் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படவே , அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு […]
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கவுள்ள தவெக மாநாடு ஏற்பாடு குறித்து ஆலோசனை செய்ய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் பிணை உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், வழக்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்ப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத்துறை வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதி முதலில் , “உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பங்கள் உள்ளது. […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் மனு அளித்திருந்தார். இரு நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் […]
சென்னை: டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. இதற்கு, 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், அதில் 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதேபோல, 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குரூப் 2 […]
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். அதனைத்தொடர்ந்து, உணவுப்பொருள் ஆய்வுக்குழு ஆய்வு செய்ததில் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்திருந்ததை உறுதிப்படுத்தியது. சிக்கிய பரிதாபங்கள் சேனல் இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதனை ட்ரோல் செய்யும் விதமாக யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் தங்களுடைய பரிதாபங்கள் சேனலில் […]