தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படை 4,500 பேர் சென்னை வந்தடைந்தனர்.
இந்த மாத இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முதற்கட்டமாக மத்திய ஆயுதப்படை 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழக வருவதாகவும், இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக துணை ராணுவப் படை தமிழகம் வருகை தந்துள்ளனர். முதற்கட்டமாக 4,500 பேர் சென்னை வந்தடைந்தனர். ஒரு கம்பெனியில் 100 முதல் 150 வீரர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
சட்ட பேரவை தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…