பெண் பிள்ளைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்ட பெற்றோர்! இன்று பலராலும் ‘வேண்டும்’ என பயன்படுத்தப்படும் சாதனை மாணவி!

Published by
லீனா

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால், மூன்றாவது பிறக்கும் பெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் சூட்டுவார்களாம். அப்படி பெயர் சூட்டினால் தான் அவர்களுக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறக்கும் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.

இந்நிலையில்,  அந்த கிராமத்தை சேர்ந்த அசோகன், கௌரி என்ற தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த பெண்குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த குழந்தை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின் அரசு உதவியுடன் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்றுள்ளார். இவரது பள்ளி மற்றும் கல்லூரி காலகட்டங்களில், அவருடன் பயின்ற சக மாணவர்கள் அந்த பெண்ணை வேண்டாம், வேண்டாம் என சொல்லி கிண்டல் செய்வார்களாம்.

இதனை அவர் தனது பெற்றோரிடம் சொல்லி வேதனை படுவாராம், அதன்பின் அவரது பெற்றோர்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, பெயரை மாற்றிக் கொள்ளலாம் என ஆறுதல் கூறி வந்துள்ளனர். பொறியியல் கல்லூரியில் பயின்ற மாணவி, கல்லூரி வளாகத்தில் நடந்த நேர்காணலில், தன்னால் உருவாக்கப்பட்ட தானியங்கி கதவை ஜப்பான் நிறுவனத்திடம் அறிமுகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்த ஜப்பான் நிறுவனம், இந்த மாணவி எங்களுக்கு வேண்டும் என, ஆண்டுக்கு 22 லட்சம் சம்பளத்தில் அந்த மாணவியை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில், சிறப்பு தூதுவராக இந்த மாணவியை நியமித்து, பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

6 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

7 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

8 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago